கல்விச் சுற்றுலாவிற்கு சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக மாணவியின் சிறிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்கென மொனராகலை அரசினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் தந்தை இறந்ததையடுத்து தாயும் பிறிதொரு திருமணத்தை முடித்துச் சென்றுள்ளார். இந்நிலையில் அம்மாணவி சிறிய தந்தையாரின் பாதுகாப்பிலேயே இருந்து வந்துள்ளார்.
சிறிய தந்தையாரினால் குறிப்பிட்ட சிறுமி கல்விச் சுற்றுலாவொன்றிற்கு கூட்டிச் சென்ற போதே மாணவி பாலியல் ஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சியம்பலாண்டுவை பொலிசாருக்கு செய்யப்பட்ட புகாரின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளார்.