சிறையில் நோயால் அவதியுறும் பேரறிவாளன்!!

350

Perarivaalan

வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

இதற்காக அவரை அவ்வப்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்கின்றனர்.

பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த புதன்கிழமை சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

பேரறிவாளன் நோய் கொடுமையால் அவதிப்பட்டுகிறார். வேலூர் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிறுநீர் தொற்று பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க வேலூரில் போதிய வசதிகள் இல்லை. எனவே சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென சிறைத்துறை டி.ஐ.ஜி.யிடம் மனு அளித்துள்ளார். பேரறிவாளன் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை பேரறிவாளன் சிறையில் மயக்கம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.