வவுனியா தச்சநாதன்குளம் ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் கடந்த 31.05.2015 அன்று ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெறும் இவ் உற்சவம் 10.06.2015 புதன்கிழமை வைரவர் மடையுடன் நிறைவடையவுள்ளது. மேலும் 09.06.2015 நாளை சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.
தினமும் மாலை 5 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி விசேட பூசைகள் இடம்பெற்று 7 மணிக்கு வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து சுவாமி திருவீதியுலா சிறப்பாக நடைபெறும்.
-பாஸ்கரன் கதீசன்-