
மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான M.H 148 என்ற பயணிகள் விமானத்தின் இயந்திரப் பகுதியில் ஏற்பட்ட தீயினால் அவுஸ்திரேலியாவின் மெல்போன் விமான நிலையத்தின் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானத்தில் 300 பயணிகள் பயணித்துள்ளதுடன்,மெல்போன் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் விமான நிலைத்தை நோக்கி பயணித்து ஒரு மணித்தியாலயத்தில் மீண்டும் மெல்போன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




