வவுனியாவில் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம்பழம் வினியோகிக்கும் நிகழ்வு!!(படங்கள்)

370

vavuniya palle (2)

புனித றமழான் மாதத்தை முன்னிட்டு நோன்பாளிகளுக்கு நோன்பு திறப்பதற்கான பேரீச்சம்பழம் வினியோகிக்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இதன்படி மன்னார், வுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள சகல முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் பேரீச்சம்பழம் பகிரந்தளிக்கப்பட்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பேரீச்சம்பழம் பகிர்ந்தளிக்கும் வகையில் வவுனியா பஸார் வீதியிளிலுள்ள பள்ளியிவாசலில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட ஒரு தொகை பேரீச்சம்பழங்களே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.

-பிராந்திய செய்தியாளர்-