பாடசாலையில் ஏற்பட்ட மோதலில் மாணவனை அடித்தே கொன்ற சகமாணவன்!!

341

Student

காஞ்சிபுரத்தில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகாஞ்சிபுரம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் ஜானகிராமன் (16), சுப்புராயர் முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இந்நிலையில், அந்த பள்ளியில் படித்துவந்த அதே பகுதியை சேர்ந்த வேறொரு மாணவனுக்கும் ஜானகிராமனுக்கும் இடையே நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஜானகிராமனின் அம்மாவை பற்றி அந்த மாணவன் தரக்குறைவாக பேசியதால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், ஜானகிராமனின் கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் அந்த மாணவன் பயங்கரமாக தாக்கியுள்ளான்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜானகிராமன் சம்பவ இடத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்ததால், தாக்குதலில் ஈடுபட்ட மாணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

பின்னர் மயங்கி கிடந்த ஜானகிராமனை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த பெற்றோர் ஜானகிராமனை அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் ஜானகிராமன் பரிதாபமாக இறந்தான். பின்னர் தகவலறிந்து வந்த பொலிசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அந்த மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.