வவுனியாவில் காஸ்சிலிண்டர் வெடித்தத்தில் குளிர்பானக்கடை தீக்கிரை!!

357

Va

வவுனியாவில் உள்ள குளிர்பானக்கடை ஒன்றில் காஸ்சிலிண்டர் வெடித்து சிதறியதில் குறித்த கடை பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் (04.07.2015) 4.30 மணியவில் வவுனியா குருமண்காட்டு சந்தியில் உள்ள குறித்த குளிர்பானக்கடையில் சமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருந்த காஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றியது.

எனினும் அங்கிருந்த பொதுமக்கள்,பணியாளர்கள் காயம் எதுவும் இன்றி காப்பற்றப்பட்டனர். கடைதீப்பற்றியதில்ஒருஇலட்சம் பெறுமதியான உணவுப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக குறித்த கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.