இலங்கை – இந்திய நல்லுறவு தொடரும்: சல்மான் குர்ஷித் உறுதி..!

323

salmanஇலங்கை அரசுடன் இந்தியா கொண்டுள்ள நல்லுறவு தொடரும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று அமைச்சர் சல்மான் குர்ஷித், நிருபர்களிடம் கூறியதாவது,

இந்திய – சீன எல்லையை ஒட்டி இந்திய பகுதியில் உள்ள இளைஞர்களை சேர்த்து தனிப்படைப் பிரிவு ஏற்படுத்தும் எண்ணம் இல்லை.

போர் காலங்களிலும் அமைதியான முறையில் தீர்வு காண விரும்புபவர்கள் நாம். எனவே, தேசிய நலனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணுசக்தி தொடர்பான உடன்பாடு குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பல துறைகளில் நல்லுறவு நிலவுகிறது. அந்நாட்டை புனரமைக்க நாம் முழுவீச்சில் இறங்கியுள்ளோம்.

அந்த நல்லுறவு தொடரும் என நம்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கம் குறித்து கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு குர்ஷித் கூறினார்.