வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!(படங்கள்)

423

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதிநாளான நேற்றையதினம் (07.07.2015) வைரவர்சாந்தி திருவிழா சிறப்பானமுறையில் இடம்பெற்றது.

ஆலய பூசைகள் முடிவுற்றதும் இரவு 9 மணியளவில் தில்லைம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் அறநெறி மாணவர்களின் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந் நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக வவுனியா மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் அவர்கள் கலந்துகொண்டு இந்து மதத்தின் சிறப்பினைப் பற்றி உரையாற்றியதுடன் ஆலயத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அறநெறி மாணவர்களது பாம்பு நடனம், கரகாட்டம், சொற்பொழிவு போன்ற பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் இந் நிகழ்வுகள் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவரும் விதமாகவும் அமைந்திருந்தன.

இறுதியாக, ஆலய பிரதகுரு சிவஸ்ரீ. சத்தியசீலன் குருக்கள் ஆலய பரிபாலனசபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் உற்சவக்காலத்தில் விற்பனை செய்யப்பட்ட அதிஷ்டலாபச் சீட்டிக்கான அதிஷ்டசாலிகளைத் தெரிவு செய்வதற்கான குலுக்கல் நடைபெற்று அவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.

-கோபிரம் சிவா-

 11655539_876910282384016_294583051_n 11667098_876873315721046_2131003797_n 11694314_876910195717358_2041841574_n 11694331_876873352387709_385079069_n 11124083_876910342384010_1567620857_n11715844_876910679050643_1248691420_n 11715850_876910629050648_1294905375_n 11717154_876910312384013_1015556245_n 11733356_876910182384026_1600864375_n