வவுனியாவில் இன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல்!!(படங்கள், காணொளி)

881

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (10.07.2015) காலை 9.30 மணி முதல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வன்னி மாவட்ட நாடளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு கட்சியினரும் வேட்புமனுத் தாக்கல் செய்துவரும் நிலையில் கு.திலீபன் தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்று பிற்பகல் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் விபரம் வருமாறு..

1.குலசிங்கம் திலீபன்
2.சுந்தரம் குமாரசாமி
3.அந்தோணி அருள்ராச சேகர்
4.விஜயரத்தினம் சுரேந்தர்
5.செல்லத்துரை ஸ்ரீராமச்சந்திர தாஸ்
6.பொன்னுத்துரை குணபாலா
7.அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ்
8.சுப்பையா சந்துரு
9.அந்தோனிமுத்து அனஸ்ரின்

செயலகத்தைச் சூழ பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதித்தடைகள் போடப்பட்டு வாகனங்கள் மாற்று வழியினூடாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

-பிராந்திய செய்தியாளர்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA