வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தீ மூட்டி தற்கொலை முயற்சி!!

314

Fire

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பைரவி (26) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் கடமையாற்றும் நபர் ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பில், நேற்று வெள்ளிக்கிழமை தான் பதிவு திருமணம் செய்து கொண்ட நபரின் வீட்டிற்கு சென்றபோது ஏற்பட்ட தகராறில், குறித்த பெண் கான்ஸ்டபிள் குறித்த நபரின் வீட்டிற்கு முன்பாக நின்று தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

படுகாயங்களுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணையினை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.