வவுனியா பிரதேச செயலகத்தினால் ஆடிப்பிறப்பை முன்னிட்டு நடாத்தப்படும் போட்டிகள்!!

390

DS

வவுனியா பிரதேச செயலகத்தினால் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஆடிப்பிறப்புக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14.07.2015) காலை 9 மணிக்கு வவுனியா பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் வவுனியா பிரதேச செயலாளர் திரு.க.உதயராசா தலைமையில் இடம்பெறவுள்ளது.

இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கிடையில், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, தனிநபர் பாடல், குழுப் பாடல், கவிதைப்பாடல் போட்டி என்பன இடம்பெறவுள்ளதுடன் மேற்படி போட்டியில் பங்குபற்றுவதற்கு விண்ணப்பித்த மாணவர்களை அன்றையதினம் போட்டிக்குரிய ஏற்பாடுகளுடன் பிரதேச செயலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தெரிவித்துள்ளார்.

-பிராந்திய செய்தியாளர்-

 

தொடர்புபட்ட செய்தி : வவுனியா பிரதேச செயலகத்தால் ஆடிப்­பி­றப்­பினை முன்­னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான போட்­டிகள்!!