வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் நேற்று(18.07.2015) பிற்பகல் 2 மணியளவில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் சைக்கிளில் பயணித்த பெண் மீது மோதியதில் பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
– தர்ஷன்-






