வவுனியாவில் சுவாமி விபுலானந்தர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!(படங்கள், காணொளி)

484

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் ,கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் நினைவு தினம் சிலையை திறந்து வைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலசந்திரன் அனுசரணையில் வவுனியாவில் 2ம் குறுக்குதெரு ,கண்டி வீதியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர் சிலை அடியில் இன்று(19. 07) காலை 9 மணிக்கு தமிழ் மணி அகளங்கன் தலைமையில் நடை பெற்றது .

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன் , து.ரவிகரன், முன்னாள் உபநகர பிதா சந்திரகுலசிங்கம் (மோகன் ), ஓய்வு பெற்ற பிரதேச செயலாளர் க.ஐயம்பிள்ளை, கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் எஸ் .எஸ் வாசன், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் சு.காண்டீபன், நகரசபை ஊழியர் யோ.பபிந்தன், கச்சேரி ஊழியர் நாகராசா, சமுக ஆர்வலர்கள் தியாகராசா, சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

P1170858 P1170863 P1170865 P1170866