வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (20.07.2015) காலை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , தமிழ்மணி அகளங்கன், கவிஞர் ஜங்கரன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட செயலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
-பிராந்திய செய்தியாளர்-