வவுனியாவில் பிரபல ஆண்கள் பாடசாலையில் பாலியல் துஸ்பிரயோக முயற்சி : ஆசிரியர் கைது!!

325

Abuse

வவுனியாவில் பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் ஆண் மாணவர்களிடம் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த ஆண் ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் வவுனியா பொலிசில் மேற்கொண்ட புகாரினை அடுத்து வவுனியா பொலிசாரினால் நேற்று (19.07.2015) கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து இன்று (20.07.2015) காலை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பொலிசாரின் தலையீட்டால் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இவ் ஆசிரியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக வவுனியா மாவட்டத்தில் பல பாடசாலைகளில் இவ்வாறான பாலியல் துஸ்பிரயோக முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பிராந்திய செய்தியாளர்-