விடிய விடிய கடவுளை மனம் உருகி கண்ணீருடன் வழிபட்ட குரங்கு!!(வீடியோ)

365

Monkey

வைத்தீஸ்வரன் கோயிலில் குரங்கு ஒன்று பத்ரகாளியம்மனை வழிபட்டது பொது மக்களை ஆச்சர்யம் அடைய வைத்துள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலின் பின் பிரகாரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன், மாலை 3 மணிக்கு வந்த குரங்கு, அம்மன் கருவறை எதிரே அமர்ந்துகொண்டது.

இதையடுத்து பக்தர்களுக்கு தீபத்தை காட்டிய சிவாச்சாரியார்கள், குரங்குக்கும் காட்டிய போது சாமியின் தரிசனத்தை ஏற்றுக்கொண்ட குரங்கு, அங்கேயே அமர்ந்துகொண்டு ஆழ்ந்த வழிபாட்டில் ஈடுபட்டது.

அப்போது, கண்களில் கண்ணீர்விட்டு பத்ரகாளியம்மனை வழிபட்டுக் கொண்டிருந்ததை பார்த்து சிவாச்சாரியார்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.
அம்மனை வழிபட வருபவர்கள் யாரையும் குரங்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை.

இரவு 9 மணிவரை பத்ரகாளியம்மனை தரிசித்த குரங்கு, கோயில் ஊழியர்கள் இரவு 9 மணிக்கு கோயிலை பூட்டிய போதும் குரங்கு வெளியில் செல்லவில்லை.

மறுநாள் காலை கோயில் ஊழியர்கள் சன்னதியை திறந்த போதும் குரங்கு அங்கே தொடர்ந்து வழிபாட்டில் இருந்ததால் கோயில் அறங்காவலர் குழுவினரிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.