தமிழ்மக்களின் நலன்களில் அக்கறையுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை தமிழ்மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் : வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர்!!

368

Kajan

தமிழ்மக்களின் நலன்களில் அக்கறையுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை தமிழ் மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

கட்சியின் ஆதரவாளர்களிடையே தொடர்ந்து பேசுகையில்..

தமிழ்த்தேசிய வழியில் நிற்கும் ஒரே கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டுமே என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. தேர்தல்களின் போது தேசியம் பேசுவதும் பின்னர் வெற்றியீட்டியதும் அதனை கைவிட்டு இணக்க அரசியலில் செல்கின்ற நிலையையே இன்றைய தமிழ் அரசியலில் காணமுடிகின்றது.

ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரையும் கொள்கையிலிருந்து விலகாமல் செயற்படுகின்றது. இளைஞர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்தல்களில் வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளதுடன் சிறந்த தலைமைமைத்துவத்தின் கீழ் போட்டியிடுகின்றோம்.

எனவே தமிழ்மக்கள் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை கொள்கையாக கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை வெற்றி பெறசெய்வதன் ஊடாக தமிழ்த்தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனத்தெரிவித்தார்.