வவுனியாவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!!

903


SL

வவுனியா புளியங்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (20.07.2015) இரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற தபால் ரயிலில்மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார்.



புளியங்குளம் முத்துமாரி நகரைச் சேர்ந்த வடிவேல் சதாசிவம் என்ற 49 வயது நபரே புளியங்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளார்.

இவரது சடலம் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது.



இன்று திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோரின் மரண விசாரணையின் பின்னார் அவரது சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.



-பிராந்திய செய்தியாளர்-