ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையின் தலை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு!!

844

Baby

மருத்துவமனையில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரகீம் என்பவரின் தாயார் ஆயிஷாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவரை தனது மனைவி பிஸ்மி, மற்றும் 2 வயது மகன் முகமது ஆகியோருடன் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தாயாரை பார்க்க மனைவி, மகனுடன் ரகீம் சென்ற போது, அறையில் உள்ள ஒரு ஜன்னல் வழியே குழந்தைக்கு வேடிக்கை காட்டிய போது, எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலை ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கியது.

இதனால் பயத்தில் குழந்தை அலறியதால், சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் அங்கு ஓடிவந்தனர்.

பின்னர் குழந்தை சிக்கிய பகுதியில் இருந்த கம்பிகளை சுமார் ஒருமணி நேரம் போராடி துண்டித்து குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.