வவுனியா நெளுக்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ப் பிரச்சாரம்!!(படங்கள்)

268

வவுனியா, நெளுக்குளம் பகுதி மற்றும் அதனையண்டிய கிராமங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

எதிர்வரும் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களை மக்களுக்கு தெரியப்படுத்தி ஆதரவைத் திரட்டும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி மாவட்ட தேர்தல் ஒருங்கியைப்பாளர் என்.ரஜீபன் தலைமையில் இப் பிரச்சார நடவடிக்கைகள் நடைபெறுகின்றது.

இதன் போது பல இளைஞர் கழங்கள், பெண்கள் அமைப்புக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் இணைந்து மாற்றத்திற்காக செயற்பட முன்வந்துள்ளன.

இப் பிரச்சார நடவடிக்கைகளில் வேட்பாளர்களான சி.கஜேந்திரகுமார், திருமதி சிவரதி ராஜ்குமார், எஸ்.என்.ஜி.நாதன் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

20150726_173423[1] 20150726_174349[1] 20150726_175138[1] 20150726_180248[1] 20150726_181041[1] 20150726_181049[1]