இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தினர் விருப்பப்படி கலாமின் சொந்த ஊரான இராமேஸ்வரத்திலேயே அவரின் இறுதி சடங்குகளை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து கலாமின் இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் இராமேஸ்வரத்தில் தொடங்கி உள்ளது. முக்கிய பிரமுகர்கள் கலாமின் இறுதி சடங்கிற்கு வர உள்ளதால் இராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, நாளை காலை 07.00 மணிக்கு கலாமின் உடல் இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டு, மாலை 07.00 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகமான நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை 10.30க்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.