வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலய மாணவியின் சாதனை!!

521

student

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி நேர்மதி கிட்ணசாமி 2015 ம் ஆண்டு வடமாகாண மட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளார்.

19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டம், 1500 மீற்றர் ஓட்டம், 5000 மீற்றர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் முதலாம் இடங்களை
பெற்றுத் தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

800 மீற்றர் தூரத்தினை 2.36.3 நேரத்திலும் 1500 மீற்றர் ஓட்டத்தினை 5.25.0 என்ற
நேரத்திலும் ஓடிமுடித்து வடமாகாணத்தில் புதியசாதனையை நிலைநாட்டியுள்ளார்.

மாணவி செல்வி நேர்மதி கிட்ணசாமி அவர்கள் தொடர்ந்து சாதனை படைக்க வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.