வவுனியா செட்டிகுளம் பிரதேசம் வீரபுரம் கிராமத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கிராம மக்களால் பிரசார கூட்டம் 26.07.2015 அன்று நடத்தப்பட்டது.
இந்தக்கூட்டத்தில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இ.இந்திரராசா, ம.தியாகராசா, எம்.பி.நடராஜ் ஆகியோரும், திரு.துசியந்தன் தலைமையிலான ஈரோஸ் கட்சியின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், வர்த்தகருமான திரு.செந்தில் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள், செட்டிக்குளம் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் செட்டிக்குளம் பிரதேச இணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு சிவசக்தி ஆனந்தனுக்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தின்போது தேர்தல் காரியாலமும் வீரபுரம் கிராம மூத்த பிரஜையால் திறந்து வைக்கப்பட்டது.