யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதான விதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வான் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றும் ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
(கலை)