வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா நேற்று (04.08.2015) செய்வாய்க்கிழமை ஆரம்பமானது. திருவிழாவின் முதலாம் நாளான நேற்று காலை 7 மணியளவில் கும்பப் பூசையைத் தொடர்ந்து 11 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து மாலை வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. நேற்று ஆரம்பமான இத் திருவிழா வரும் 16.08.2015 அன்று நிறைவடையவுள்ளது.
தினமும் அபிஷேகப் பூசை, சுவாமி திருவீதியுலா என்பன நடைபெறவுள்ளன. இன் நிகழ்வுகளில் பக்தர்களைக் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக் கொள்கின்றனர்.
-கரன்-