வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சிவநாதன் கிஷோர் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய விசேட பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்..
கிராமப்புற மக்களுக்கு வீதிவசதிகள் தேவைப்படுகிறது. அவர்களுக்கு வீதி வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் அதேபோல் காணாமல் போனவர்களை வைத்து 6 வருடமாக போராட்டம் நடாத்தி அரசியல் இலாபம் ஈட்டுகின்றார்கள். இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கத்திடம் கதைத்து சரியான தீர்வை நான் பெற்று கொடுப்பேன். கணவனை இழந்த பெண்களுக்கு வாழ்வாதார வசதிகள் சுயதொழில்களை ஏற்படுத்திக் கொடுப்பேன். அங்கவீனமான முன்னாள் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பேன் என்று தெரிவித்தார்.
அவரது முழுமையான செவ்வியை கீழுள்ள காணொளியில் காணுங்கள்..