நேற்று (06.08.2015) தரணிக்குளம் தரணிச்சுடர் முன்பள்ளியில் திரு.ச.இராஜேஸ்வரன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் வவுனியா வடக்கு) அவர்களின் தலைமையில் வவுனியா வடக்கு வலய ஓமந்தை கோட்ட முன்பள்ளிகளுக்கிடையிலான மழலைகள் திறனாய்வுவிழா நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.வ.ஸ்ரீஸ்கந்தராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர் – வவுனியா வடக்கு) மற்றும் சிறப்பு விருந்தினராக திரு.ஏ.கே.சசாலராஜா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்- வ வுனியா வடக்கு), திரு.சு.ஜெய்கீசன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், வவுனியா வடக்கு)
திரு.திருமதி.ப.சத்தியநாதன் (வைத்தியர்), திரு.டினேஸ் (சிகரம் பவுன்டேசன் உறுப்பினர்), திரு.தா.அமிர்தலிங்கம் (கோட்டக் கல்விப் பணிப்பாளர் – ஓமந்தை), திரு.நாகேந்திரராசா(ஏரிபொருள் பொஸ்டோ நிறுவனத் தலைவர்) ஆகியோர் கலந்து சிறப்பினர்.
பந்துப் பரிமாறல், பழம் வைத்தலும் எடுத்தலும், முயல்ப் பாய்ச்சல், தவளைப் பாய்ச்சல், கோபுரம் அமைத்தல், அஞ்சல் வளையம் போடுதல், சாக்கோட்டம், கயிறு இழுத்தல், தடைதாண்டிப் பாய்தல் என பல விளையாட்டுக்களில் சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.
பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
-பிராந்திய செய்தியாளர்-