வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் கோவில் கொடியேற்றம்!!(படங்கள்)

1073

வவுனியா சிதம்பரபுரம் மலை மீது குடிகொண்டுள்ள ஈழத்து பழனி முருகன் கொடியேற்றம் 14.08.2015 இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.25 க்கு கொடியேற்ற பூசையுடன் அலங்கார திருவிழா ஆரம்பமானது .

15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 29.08.2015 தேர்த் திருவிழாவும், 30.08.2015 தீர்த்தத் திருவிழாவும் சிறப்பாக நடைபெற உள்ளதாக ஆலய பரிபாலசபை தலைவர் மாதவன் தெரிவித்தார்.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வை.சிவசங்கரகுருகள் உற்சவ பிரதம குருவாகவும், சிவஸ்ரீ சி.ஸ்ரீ சங்கர சர்மா உதவி குருக்கள் ஆகவும் திருவிழாவை சிறப்பாக நடாத்த உள்ளார்கள் .

பக்தர்கள் சிதம்பரபுரத்தில் மலை மீது குடிகொண்டுள்ள ஈழத்து பழனி முருகனின் திருவிழா உற்சவங்களை கண்டு இஷ்ட சித்திகளை பெற்று பல்லாண்டு காலம் வாழ அனைத்து இந்து பக்தர்களையும் மலை ஏறி திருவிழா காண வருமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

DSCN7215 DSCN7222 DSCN7224 DSCN7228 DSCN7231 DSCN7237 DSCN7239 DSCN7245 DSCN7246 DSCN7257 DSCN7266 DSCN7280 DSCN7284 DSCN7292 DSCN7295 DSCN7297 DSCN7364 DSCN7365 DSCN7367 DSCN7369 DSCN7374 DSCN7375 DSCN7381