பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ். விஜயம்..!

359

ukஇலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று மேற்கொள்ளவுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்ற கன்ஸவேட்டிவ் மற்றும் தொழில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட குழுவினர் அடங்கிய குழுவினர் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.

இக்குழுவினர் எதிர்வரும் 26ஆம் திகதிவரை இலங்​கையில் தங்கியிருப்பர்.

இக்காலப் பகுதியில் இந்த குழுவினர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

அத்துடன் இலங்கையின் தற்போதைய மீளமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் அந்த குழு முழுமையான ஆராய்வினை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரித்தானியாவின் வெளிவிவகார திணைக்கள செயலாளர் எலஸ்டயார் பர்ட் இந்த முறை மனித உரிமை விடயங்களில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்த தவறினால் எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் அது தொடர்பில் பிரித்தானியா உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எச்சரித்திருந்தார்.