வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் மேற்கொள்வதற்காக பல்வேறு உதவித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.
இதன் ஒரு அங்கமாக மின்சார நீர் இறைக்கும் இயந்திரம் இயந்திரங்களை வழங்கி வைத்தார். இன் நிகழ்வில் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன. இன் நிகழ்வில் கால்நடை அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.






