சுவிட்சர்லாந்தின் பிரதான நகரங்களான சூரிச், பாசல் மற்றும் ஸ்காஃப்ஹூசென் போன்ற பகுதிகளில் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்நகரங்களின் வெப்பநிலையானது 31 டிகிரி செல்சியஸை எட்டியுள்ள நிலையில், இது மேலும் 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் எனவும், அதனால் அனல் காற்று வீசலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சியோன் பகுதியில் கடந்த 19ம் திகதி 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 20ம் திகதி 37 டகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்பட்டுள்ளது.
ஜெனீவாவின் வெப்பநிலையானது தற்போது 30 டிகிரி செல்சியஸ் ஆக காணப்படுகின்றது.
இந்நிலையில் அடுத்துவரும் தினங்களில் முதியவர்கள், குழந்தைகளை மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.