வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை)இன்று 14.09.2015 திங்கட்கிழமை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் பாடசாலையின் 82 வது நிறைவை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் சகிதம் காலை ஆராதனை வேளையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மேற்படி நிகழ்வு பாடசாலையின் அதிபர் மரியதாஸ் தலைமையில் இடம்பெற்றது. காலை ஆராதனை வேளையில் கல்லூரியின் 82 ஆண்டு நிறைவை முன்னிட்டு மாணவர்கள் கொடிகளை தமது சட்டையில் அணிந்து கல்லூரியின் ஆண்டுநிறைவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் . அத்துடன் கல்லூரியின் 82 வருட சாதனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
1933 ஆம் ஆரம்பிக்கபட்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் 82 ஆண்டுகளை கடந்து வன்னிமண்ணில் கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து தனக்கென ஒரு இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்து வவுனியாவின் முன்னணி தேசிய பாடசாலையாக திகழ்கின்றமை யாவரும் அறிந்ததே.
மேற்படி கல்லூரியின் 82 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றுமாலை 4.30 மணியளவில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஐயாத்துரை மண்டபத்தில் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றினையும் நடாத்தியிருந் தனர். மேற்படி ஒன்றுகூடலின் போது தற்போது பாடசாலையில் நடைபெறுகின்ற அபிவிருத்தி மற்றும் அழகு படுத்தல் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் மற்றும் மாணவர்களது கற்றல் கற்பித்தல் செயலபாடுகள் கல்வித்துறை சாதனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .
-பிரதேச நிகழ்வுகளுடன் கஜன் –