வவுனியாவில் உலக சமாதான தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்!!

1052

unnamed

உலக சமாதான தினத்தை முன்னிட்டு, வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும் திரி சாரணர் குழுவும் இணைந்து 10வது மாபெரும் இரத்ததான முகாமை நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் செயலாளரும் உதவி மாவட்ட ஆணையாளருமான திரு.சு.காண்டீபன் தெரிவித்தார்.

காலம் – 20/09/2015 (ஞாயிறு )
நேரம் – காலை 08.00 மணி முதல் மதியம் 12.30 மணிவரை
இடம் – விபுலாநந்தாக் கல்லூரி, பண்டாரிக்குளம், வவுனியா.
இரத்ததான நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் குருதிக்கொடையாளிகள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்களின் வரவை உறுதிப்படுத்தலாம்.

தொடர்புகளுக்கு – 0766644059, 0770779434