வவுனியா குருமன்காடு கிராம அபிவிருத்திச்சங்க பாலர் பாடசாலையின் 15வது வருடாந்த விளையாட்டு விழா கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு.ச.வாமதேவன் (ஓய்வூபெற்ற வங்கி முகாமையாளர்) அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (20.09.2015) நடைபெற்றது.
இன் நிகழ்வின் பிரதமவிருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா, சிறப்பு விருந்தினராக பகுதி கிராமசேவையாளரான திரு.கனகலிங்கம் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், குருமன்காடு பிள்ளையார் ஆலயத் தலைவர், அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பாடசாலையின் பழையமாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.






