வயோ­திபம் கார­ண­மாக பார்வை இழப்­பவர்­க­ளுக்கு பார்­வையை பெற்­றுத்­தரும் புரட்­சி­கர சிகிச்சை!!

325

clear eye logoஉல­க­ளா­விய ரீதியில் வயோ­திபம் கார­ண­மாக கண் பார்­வையை இழந்து வரும் மில்­லி­யன்­க­ணக்­கான மக்­க­ளுக்கு உதவக் கூடிய புரட்­சி­கர சிகிச்சைத் தொழில்­நுட்­ப­மொன்றை பிரித்­தா­னிய மருத்­துவ நிபு­ணர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

இந்த 45 நிமி­டத்­திலும் குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறை­யா­னது வயோ­திபம் கார­ண­மாக தசைகள் சிதை­வடைவதால் பார்­வையை இழந்து வரும் மக்­க­ளுக்கு மீண்டும் பார்­வையைப் பெற்றுக் கொள்ள உத­வு­வ­தாக அமையும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பார்­வையை இழந்த பெண்­ணொ­ரு­வ­ருக்கு (60 வயது) அவ­ரது விழித்­தி­ரையில் இணைக்­கப்­பட்ட மூல­வு­யிர்க்­க­லங்­களை உட்­செ­லுத்தி லண்டன் பல்­க­லைக்­க­ழக கல்­லூரி மருத்­து­வர்­களால் மேற்­படி புரட்­சி­கர சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்த சிகிச்­சை­யை­ய­டுத்து உட­ன­டி­யாக அந்தப் பெண்­ணுக்கு பார்வை கிடைக்­க­வில்லை என்ற போதும், அவர் எதிர்­வரும் டிசம்பர் மாதத்திற்குள் பார்வையை மீளப் பெற்று விடுவார் என நம்புவதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.