மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!!

350

pak

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

ஐந்தாவது போட்டியில் கடும் சவால்களுக்கு மத்தியில் 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை தன்வசப்படுத்தியது.

க்ரோஸ் ஐஸ்லெட்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 243 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அஹமட் ஷெஷாட் 64 ஓட்டங்களையும் மிஸ்பா உல்ஹக் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றது.

நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவானார்.