10,000 இலங்கையர்கள் சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்..!

369


saudiசுமார் பத்தாயிரம் இலங்கை பணியாளர்கள் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 16000 இலங்கை பணியாளர்களில் 6000 பேர் நாடு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு நாடு திரும்பிச் செல்ல பொது மன்னிப்புக் காலம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பரம் 3ம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அமுலில் இருக்கும்.



இக்காலத்தில் சட்டவிரோதமாக சவுதியில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என அமைச்சர் டிலாக் பெரேரா குறிப்பிட்டார்.