இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதித் தாயும் மகளும் விடுதலை!!

414

jail

சட்டவிரோதமாக பட்கில் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றபோது கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணும் அவரது மகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவில் 04.3.2012 அன்று நடைபெற்ற அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்று திரும்பிய ராமேஸ்வரம் பக்தர்களின் படகில், இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த உஷா என்ற 32 வயது பெண்ணும் அவரது 6 வயது மகள் நீராவும் கள்ளத்தனமாக ஏறி ராமேஸ்வரம் சென்றனர்.

இருவரையும் கடவுச்சீட்டு சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். கடந்த 6 மாதமாக மண்டபம் முகாமில் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று ராமேஸ்வரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உஷாவிற்கு 50 ரூபாய் அபராதம் விதித்தும், விடுதலை செய்தும் நீதவான் தீர்ப்பளித்தார்.

இதையடுத்து இருவரும், மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.