சிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 115 ரன்கள் குவித்த இந்திய தற்காலிக தலைவர் விராட் கோலிக்கு இது 15வது சதமாகும்.
இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 15 சதங்களை எடுத்த வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அவர் தனது 15வது சதத்தை 106வது ஆட்டத்தில் பெற்றிருக்கிறார்.
இதற்கு முன்பு பாகிஸ்தானின் சயீத் அன்வர் தனது 143வது போட்டியில் 15வது சதம் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. சவுரவ் கங்குலி 144வது ஆட்டத்திலும், கிறிஸ் கெய்ல் 147வது ஆட்டத்திலும் இந்த இலக்கை எட்டினார்கள்.
சச்சின் டெண்டுல்கர் 15வது சதத்தை தனது 182வது ஆட்டத்தில் தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.