மாணவர்கள் மீதான தாக்குதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

616

human-rights-commission-of-sri-lanka

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.மாணவர்களால் இன்று இந்த முறைப்பாடு வழங்கப்படவுள்ளது.

மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தாம் பொறுப்பேற்பதாகவும் மாணவர்களைத் தாக்கியமை குறித்து அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனவும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லகிரு வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த முற்பட்ட வேளை சிறிய சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என, இது குறித்த பொலிஸ் ஊடக சந்திப்பில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.