கரையொதுங்கிய பையில் பெண்ணின் உடற்பாகங்கள்!!

407

article-0-1A625BBA000005DC-208_634x423கல்பிடிய – எரபுதுவ தீவில் கரையொதுங்கியுள்ள பையொன்றில் இருந்து பெண்ணொருவரின் உடற்பாகங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை மீனவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரால் குறித்த உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கல்பிடிய – ஜனசவிபுர கிராமத்தில் இருந்து 150 மீற்றர் வரையான தூரத்தில் இவை இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பையில் உடற்பாகங்களை இட்டு மண்ணை நிரப்பிய பின்னர் அதனை நீரில் மூழ்கடித்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பை வெடித்து அதிலிருந்த மண் வௌியேறிய பின்னர் அது கரையொதுங்கியுள்ளது.

மேலும் ஒரு வாரங்களுக்கு முன்னர் குறித்த உடற்பாகங்கள் அந்த இடத்திற்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை சடலத்தின் மேல் பாகங்கள் இல்லாமையால் மரணித்தவர் யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்பிடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.