24வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று நிறைவடையவுள்ளது. மால்டாவில் கடந்த 27ம் திகதி ஆரம்பமான இந்த நிகழ்வில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கு பற்றியிருந்தனர். பிரித்தானிய மகாராணியின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதேவேளை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர் பிரான்ஸ் நோக்கி புறப்படவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாடானது பிரான்ஸின் லி பொர்கேர்டில் நகரில் நாளை (30) முதல் டிசம்பர் 11ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூன் உள்ளிட்ட 147 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர்.