இன்று 28.11.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றம் மற்றும் தமிழ் விருட்சம் ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் ராம் சிவா பவுண்டேசனின் அனுசரனையில் சேர்.பொன் இராமநாதன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கூமாங்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சேர்.பொன் இராமநாதன் நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்பட்டதுடன் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் சுமார் 60ற்கும் மேற்பட்டோருக்கு இலவச பழமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றம் மற்றும் தமிழ் விருட்சம் ஆகிய அமைப்புக்களின் உறுப்பினர்கள், ஆலய நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.






