இலங்கை உதைபந்தாட்ட சமேளனத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நடுவர்களுக்கான உடல் தகுதிகாண் பரீட்சை வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.
வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.





