வவுனியா செக்கடிப்புலவு அ.த.க. பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு விழா நேற்று (05.12.2015) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா மற்றும் M.P.நடராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இம் மாணவர்களை சித்திபெறவைத்த ஆசிரியரான M.கமலதாஸ் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.
இன் நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள், பழையமாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.