தெற்காசிய சமாதான நிறுவனம், யுனிக், தேசிய இளைஞர் சபை மன்றம், சமாதான சம்மேளனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வடமாகாணத்தில் நிலையான அபிவிருத்திக்கும் சமாதானத்திற்குமான செயலமர்வு ஒன்றினை நேற்று(10.12.2015) காலை 10 மணியளவில் வவுனியா நகர மண்டபத்தில் நடாத்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், நகரசபை செயலாளர் திரு.தர்மேந்திரா, தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு செயலமர்வினை ஆரம்பித்து வைத்தனர்.
இச் செயலமர்வில் 17வயதிற்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்குபற்றியிருந்ததுடன், இளைஞர் கழக உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சாரணர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






