இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா பலநோக்கு மண்டபத்தில் வாழ்வாதார உதவி வழங்கும் செயற்றிட்டம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் செ.மயூரன், வுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத் தலைவர் பிரபாகரக் குருக்கள், கலைஞர் மாணிக்கம் ஜெகன், வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள அமைப்பாளர் மற்றும் சமயத் தலைவர்கள், முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
113 முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்ட நிகழ்வில் வடமாகாண கடற்தொழில் அமைச்சர் ப.டெனீஸ்வரன் அவர்களினால் 50,000 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.






