ஓடும் காரில் 14 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்!!

294

1 (11)

இந்தியாவின் டெல்லியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் ஓடும் காரில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான கார் நடமாட்டத்தை கண்காணித்த பொலிஸ் ரோந்து வாகனம் ஒன்று, குறித்த காரை விரட்டிச்சென்று பிடித்தபோது சம்பவம் பற்றி தெரியவந்தது. எனினும் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தப்பியோடிய நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாடசாலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் வேளையிலேயே குறித்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.