கார்த்திகை மாதம் 25ம் நாள் (11.12.2015) மாலை 6 மணியளவில் மாலைஅணிந்து சபரிமலை செல்ல இருக்கும் ஐயப்ப சாமிமாரின் வரவினை முன்னிட்டும்,
அகில இலங்கை தீர்த்தயாத்திரை குழுத் தலைவர் அருட்திரு. ரவிகுருசாமி அவர்களின் வரவை முன்னிட்டும் வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட ஐயப்ப சுவாமிமார்களின் பாத பூஜைகளும், ஆனந்தமிகு பஜனையும், அலங்காரப் படிப் பூஜையும், பாத தரிசனங்களும், இரவு ஜோதிபூஜையும் ஆலய தர்மகர்த்தா அறநெறிச் செல்வி. கு.ஜெயராணி (சாமி அம்மா) தமமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
-விஜிகரன்-






